×

1 நாளாகமம் : 8

  • 1 : பென்யமீன், பேலா என்னும் தன் மூத்த குமாரனையும், அஸ்பால் என்னும் இரண்டாம் குமாரனையும், அகராக் என்னும் மூன்றாம் குமாரனையும்,
  • 2 : நோகா என்னும் நாலாம் குமாரனையும், ரப்பா என்னும் ஐந்தாம் குமாரனையும் பெற்றான்.
  • 3 : பேலாவுக்கு இருந்த குமாரர், ஆதார், கேரா, அபியூத் என்பவர்கள்.
  • 4 : அபிசுவா, நாமான், அகோவா,
  • 5 : கேரா, செப்புப்பான், ஊராம் என்பவர்கள் எகூதின் குமாரர்.
  • 6 : கேபாவின் குடிகளுக்கு மூப்பனான தலைவராயிருந்து, இவர்களை மனாகாத்திற்கு அழைத்துக்கொண்டுபோனவர்கள், நாமான், அகியா, கேரா என்பவர்களே.
  • 7 : கேரா அவர்களை அங்கே அழைத்துக்கொண்டுபோனபின்பு, ஊசாவையும் அகியூதையும் பெற்றான்.
  • 8 : அவர்களை அனுப்பிவிட்டபின், சகராயீம் மோவாப் தேசத்திலே ஊசிம் பாராள் என்னும் தன் பெண்ஜாதிகளிடத்திலே பெற்ற பிள்ளைகளைத்தவிர,
  • 9 : தன் பெண்ஜாதியாகிய ஓதேசாலே யோவாபையும், சீபீயாவையும், மேசாவையும், மல்காமையும்,
  • 10 : எயூசையும், சாகியாவையும், மிர்மாவையும் பெற்றான்; பிதாக்களின் தலைவரான இவர்கள் அவனுடைய குமாரர்.
  • 11 : ஊசிம் வழியாய் அவன் அபிதூபையும் எல்பாலையும் பெற்றான்.
  • 12 : எல்பாலின் குமாரர், ஏபேர், மீஷாம், சாமேத்; இவன் ஓனோவையும் லோதையும் அதின் கிராமங்களையும் உண்டாக்கினவன்.
  • 13 : பெரீயாவும் சேமாவும் ஆயலோன் குடிகளுடைய பிதாக்களிலே தலைவராயிருந்தார்கள்; இவர்கள் காத்தின் குடிகளை ஓட்டிவிட்டார்கள்.
  • 14 : அகியோ, சாஷாக், எரேமோத்,
  • 15 : செபதியா, ஆராத், ஆதேர்,
  • 16 : மிகாயேல், இஸ்பா, யோகா என்பவர்கள் பெரீயாவின் குமாரர்.
  • 17 : செபதியா, மெசுல்லாம், இஸ்கி, ஏபேர்,
  • 18 : இஸ்மெராயி, இஸ்லியா, யோபாப் என்பவர்கள் எல்பாலின் குமாரர்.
  • 19 : யாக்கிம், சிக்ரி, சப்தி,
  • 20 : எலியேனாய், சில்தாய், எலியேல்,
  • 21 : அதாயா, பெராயா, சிம்ராத் என்பவர்கள் சிமியின் குமாரர்.
  • 22 : இஸ்பான், ஏபேர், ஏலியேல்,
  • 23 : அப்தோன், சிக்ரி, ஆனான்,
  • 24 : அனனியா, ஏலாம், அந்தோதியா,
  • 25 : இபிதியா, பெனூயேல் என்பவர்கள் சாஷாக்கின் குமாரர்.
  • 26 : சம்சேராய், செகரியா, அத்தாலியா,
  • 27 : யரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் எரொகாமின் குமாரர்.
  • 28 : இவர்கள் தங்கள் சந்ததிகளின் பிதாக்களிலே தலைவராயிருந்து, எருசலேமிலே குடியிருந்தார்கள்.
  • 29 : கிபியோனிலே குடியிருந்தவன், கிபியோனின் மூப்பன்; அவன் பெண்ஜாதியின்பேர் மாக்காள்.
  • 30 : அவன் மூத்த குமாரன் அப்தோன் என்பவன்; மற்றவர்கள் சூர், கீஸ், பாகால், நாதாப்,
  • 31 : கேதோர், அகியோ, சேகேர் என்பவர்கள்.
  • 32 : மிக்லோத் சிமியாவைப் பெற்றான்; இவர்களும் தங்கள் சகோதரரோடுங்கூட எருசலேமிலே தங்கள் சகோதரருக்குச் சமீபத்தில் குடியிருந்தார்கள்.
  • 33 : நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான்.
  • 34 : யோனத்தானின் குமாரன் மேரிபால்; மேரிபால் மீகாவைப் பெற்றான்.
  • 35 : மீகாவின் குமாரர், பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் என்பவர்கள்.
  • 36 : ஆகாஸ் யோகதாவைப் பெற்றான்; யோகதா அலமேத்தையும், அஸ்மாவேத்தையும், சிம்ரியையும் பெற்றான்; சிம்ரி மோசாவைப் பெற்றான்.
  • 37 : மோசா பினியாவைப் பெற்றான்; இவன் குமாரன் ரப்பா; இவன் குமாரன் எலியாசா; இவன் குமாரன் ஆத்சேல்.
  • 38 : ஆத்சேலுக்கு ஆறுகுமாரர் இருந்தார்கள்; அவர்கள் நாமங்களாவன, அஸ்ரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், செகரியா, ஒபதியா, ஆனான்; இவர்கள் எல்லாரும் ஆத்சேலின் குமாரர்.
  • 39 : அவன் சகோதரனாகிய எசேக்கின் குமாரர், ஊலாம் என்னும் மூத்தகுமாரனும், ஏகூஸ் என்னும் இரண்டாம் குமாரனும், எலிபேலேத் என்னும் மூன்றாம் குமாரனுமே.
  • 40 : ஊலாமின் குமாரர் பராக்கிரமசாலிகளான வில்வீரராய் இருந்தார்கள்; அவர்களுக்கு அநேகம் புத்திரர் பௌத்திரர் இருந்தார்கள்; அவர்கள் தொகை நூற்றைம்பதுபேர்; இவர்கள் எல்லாரும் பென்யமீன் புத்திரர்.